டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் 94,420 பேர் உள்ள நிலையில் கடந்த 24மணி நேரத்தில் 17,073 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரேநாளில் புதிதாக மேலும், 17,073 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,07,046 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 21 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம்,  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,020 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

நேற்று மட்டும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,208 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,27,87,606 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.57% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 94,420 பேர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக உள்ளது.

இந்தியாவில்  இதுவரை 1,97,11,91,329 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,49,646 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.