திருவள்ளூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் 26 வயது வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில் வசிப்பவர் கண்ணன். 26 வயதான கண்ணன், காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் நீண்ட நாளாக பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். பல பகுதிகளில் பெண் பார்த்தும் அவருக்கு எந்த வரனும் கிடைக்கவில்லை. இதனால் கண்ணன் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வீட்டில் உள்ள தனது படுக்கை அறைக்குள் சென்ற கண்ணன், நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வழக்கு பதிந்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.