சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்குகளில் மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஜனவரியில் 20 பேர் கைதான நிலையில், 2017-இல் நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்வு முறைகேடு தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 2 தினங்களுக்கு முன்னதாக டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், இன்று மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 97 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.