சென்னை:
சென்னையில் எதிர்திசையில் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.26 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்ன பெருநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்ன பெருநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையில் எதிர்திசையில் பயணம் செய்தவர்களிடம் இருந்து இரண்டு நாட்களில் ரூ. 26 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சாலையில் எதிர்திசையில் பயணம் செய்ததாக மொத்தமாக 2,680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.