சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக புதிதாக 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ்  சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆம்புலன்சில் மருத்துவர் ஒருவரும் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக புதிதாக 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கொட்டிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்கப் பட்டது. 256 ஆம்புலன்ஸ் சேவை மூலம் நடமாடும் மருத்துவ சேவை 645 ஆக உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.