சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்  என நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய  அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள ததாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, சு கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அந்த குழுவினர், கடந்த 14-ஆம் தேதி  கூடி ஆலோசனை நடத்தினர்.  இந்த குழுவினரின் முதல் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் கருத்துக்களை அனுப்பலாம் என அறிவிப்பு வெளியிட்டனர்.  இந்த நிலையில், நேற்று  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில்  2வது கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியளார்களை சந்தித்த  நீதிபதி ஏ.கே.ராஜன்,  நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.அதன்படி,இதுவரை 25 ஆயிரம் பேர் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு கருத்து தெரிவித்தவர்களுள் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறியவர்களின் கருத்தே அதிகமாக உள்ளது.

எனவே,அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின் எங்களது இறுதி அறிக்கை தயார் செய்யப்படும். மேலும்,அரசுஅளித்துள்ள காலவரம்புக்குள் எங்களது அறிக்கையை அளிக்க முயற்சிப்பதற்காக குழு உறுப்பினர்கள் அனைவரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்றும் பணிபுரிகிறோம் .எனினும், தேவைப்பட்டால் அரசிடம் கூடுதல் கால அவகாசம் கேட்க திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.