வுகாத்தி

சாம் மாநிலத்தில் வெள்ளத்தில் 24 பேர் பலியாகிப் பல சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன

அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் இந்த ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தால் மொத்தம் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று மேலும் 6 பேர் பலியாகி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் 3,246 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  குறிப்பாக நகாவன் மாவட்டம் அதிகம் பாதிப்பிற்கு இலக்காகி உள்ளது. இங்கு 2.88 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அசாமில் உள்ள திசாங், பராக் மற்றும் குஷியாரா ஆகிய ஆறுகளில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.  வெள்ளத்தால் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவப் படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரக்கால சேவைத் துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாமில் உள்ள நியூ கஞ்ஜங், பியாங்புய், மவுல்ஹோய், நம்ஜேஉராங், தெற்கு பகிதர், மகாதேவ் தில்லா, காளிபாரி, வடக்கு பகிதர், ஜியான் மற்றும் லோடி பங்மவுல் கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.  மொத்தம் 1,00,732.43 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன.

மாநிலத்தில் மொத்தம் 499 நிவாரண முகாம்கள் மற்றும் 519 நிவாரண வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 92 ஆயிரத்து 124 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பல பகுதிகளிலும் தகவல் தொடர்பு முடக்கப்பட்ட நிலையில், தற்போது அவை மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.

லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், நிலச்சரிவுகளாலும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மலைப்பாதையில் ரயில் சேவை ஒரு வாரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல பகுதிகளில் அணைகள், சாலைகள், பாலங்கள், வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.