திருவனந்தபுரம்: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1819 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில், ஜிகா வைரஸ் ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ்க்கு இன்று மேலும்  18,531 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று மேலும் 98 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மொத்தம் 15,969 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் தொற்றில் இருந்து  15,507 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், கேரளாவில் 1,38,124  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில்   கடந்த 24 மணி நேரத்தில் 2,174 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 18 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  2,737 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 22,358 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 19,16,914 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை: 13,241 ஆகவும் உயர்ந்துள்ளது.