நெல்லை

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதி கனமழை கொட்டித்தீர்த்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதிக மழை பெய்தது.

கனமழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே சுமார் 23 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது.

அதாவது முன்பதிவு இல்லாத நெல்லை-செங்கோட்டை, நெல்லை – நாகர்கோவில் ரயில்கள், நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்சி-திருவனந்தபுரம், செங்கோட்டை-நெல்லை, திருச்செந்தூர்-எழும்பூர், திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி உட்பட 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.