டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,411 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 67 பேர் உயிரிழங்நதுள்ளனர், மேலும்  1,50,100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8  மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி நேற்று ஒரே நாளில், மேலும், புதிதாக 21,411 பேர் பாதித்துள்ளனர். தினந்தோறும் பாதிப்பு விகிதம் 4.46 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு பாதிப்பு 4 கோடியை தாண்டியது.

தற்போது நாடு முழுவதும் 1,50,100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24மணி நேரத்தில்  20,726 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 379 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.

நேற்று கொரோனாவுக்கு புதிதாக 67 பேர் இறந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 997 ஆக உள்ளது.  : நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் இதுவரை 201,68 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 27,78,013 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.