காரைக்கால்

ன்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 22 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது.

இலங்கை கடற்படையினர் எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்வது தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.. தமிழக அரசு இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் கைதுகள் குறையாமல் உள்ளது.

இன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது  அதாவது.காங்கேசன் கடல் பகுதி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை கடற்படை மீனவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.