டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், நேற்று 18,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 231 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக மேலும் 15,786 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,43,236 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 231 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,53,042 ஆக உயர்ந்தது.

நேற்று தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,641 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,14,449 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவில் 1,75,745 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில்கடந்த 24 மணி நேரத்தில் 61,27,277 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 1,00,59,04,580 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது)