தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 129, செங்கல்பட்டில் 41 திருவள்ளூரில் 11 மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை மற்றும் கன்னியாகுமரியில் தலா 9 பேருக்கும் திருச்சியில் 3 பேருக்கும் சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் தலா 2 பேருக்கும் ஈரோடு, நீலகிரி, சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர கனடா, லெபனான், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 1 பயணிக்கும் அஸ்ஸாம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 13,180 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 121 ஆண்கள் 98 பெண்கள் என மொத்தம் 219 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

137 பேர் இன்று குணமடைந்த நிலையில் 1159 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.