சென்னை: தமிழகத்தில்  நேற்று  1,170 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில்  148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள மாவட்டமாக சென்னை திகழ்கிறது.

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி, மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,90,633 பேர் ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,948 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரையில் 26,40,627 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும கொரோனா தொற்று காரணமாக  14,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று மேலும் 148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,53,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணத்துள்ளார். இதன்மூலம் சென்னையில் இதுவரை   8,531 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று மேலும் 161 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை  மொத்தம் 5,42,939 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,751 பேர் சிகிச்சையில் உள்ளனர்.