சென்னை

டைபெற உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகள் இடைதேர்தலில் போட்டியிட போவ்திலை என நடிகர் ரஜ்னிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால் கட்சியின் பெயர் மற்றும் கொடி இவைகளை பற்றி அறிவிப்பு வழங்காமல் இருந்தார் .

அத்துடன் கடந்த மாதம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்டிருந்தார்.

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தேர்தலுக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு மக்களவை தேர்தல் அறிவிப்புடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம் இந்த 21 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய அறிக்கையில் அவர் சட்டப்பேரவை தேர்தல்களை மட்டுமே மனதில் கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.