சென்னை

மிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு இதுவரை 208 தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

நேற்ற் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம், சென்னையில் உரிமம் பெறப்பட்ட 21,229 துப்பாக்கிகளில், இதுவரை 15,113 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 208 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 962 நபர்களுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.