சென்னை:

மிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற சென்னை  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த செந்தில்குமார், தான் தமிழ் வழியில் படித்ததாகவும், ஆனால் தனக்கு பணி வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு நீதிபதி ராஜா,   தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.