டெல்லி;  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4676 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.37 சதவிகிதமாக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும்  ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டுஉள்ளது. தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  47,379 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ககடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,043 ஆக பதிவாகியுள்ளது இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,370 பேர் ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,676 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,67,340 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,16,83,24,537 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,10,410 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.