சென்னை: தமிழகத்தில் நேற்று  புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் கொரோனா தொற்றால்  ஏற்படும் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு  வெளியிட்ட தகவலின்படி,புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 26,45,380 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாநிலம் முழுவதும்  27 பேர் (அரசு மருத்துவமனை – 24 பேர், தனியார் மருத்துவமனை – 3பேர்) உயிரிழந்துள்ளதுடன், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,337 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,93,074 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில்  16,969 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில தலைநகர் சென்னையில் நேற்று  மேலும் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிக பட்ச பாதிப்பு சென்னையில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து.  கோவையில் இன்று 215 பேருக்கும், ஈரோட்டில் 131 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில்  இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  5,47,705 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில் நேற்று  2 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,449 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் நேற்று 155 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,37,245 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,011 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

19.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 48,77,273 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 19.09.2021 அன்று 2,02,931 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: