டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,781  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 12,899 ஆக இருந்த நிலையில்,  மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 12,781 ஆக உள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,09,473 ஆக பதிவாகியுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.32 ஆக உள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 15 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,873 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 8,537 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,27,07,900  ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.61% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில்தற்போது  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 76,700  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.18% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான (2,96,050) மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

நாட்டில் இதுவரை 1,96,18,66,707 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும்  2,80,136 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.