ரப்பாக்கம்

ரப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு பைக்கில் தனது குடும்பத்துடன் சென்ற போது 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிர் இழந்தது.

 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அடுத்ததாக உள்ள ஊரப்பாக்கத்தில் ராம்நகர் என்னும் பகுதி உள்ளது. அங்கு சுமார் 30 வயதாகும் பிரகாஷ் என்னும் இளைஞர் வசித்து வருகிறார்.  நேற்று இவர் தனது குடும்பத்துடன் தனது பைக்கில் பயணம் செய்துள்ளார்.

மாலை 5.3 மணிக்கு கேளம்பாக்கம் அடுத்துள்ள பொன்மார் பகுதியில் உள தனது உறவினரை  பார்க்க பிரகாஷ் குடும்பத்துடன் பைக்கில் சென்றுள்ளார்.   அவர்கள் மலைத்தெரு அருகே சென்ற போது நிலை தடுமாறி பைக்கில் இருந்தவர்கள் கீழே விழ்நுந்துள்ளனர்.    பிரகாஷின் இரண்டு வயது மகன் மோகித் முன்னால் அமர்ந்திருந்தார்.

கீழே விழுந்ததில் குடும்பத்தினர் அனைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.     அதையொட்டி அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.   இதில் படுகாயம் அடைந்த குழந்தை மோகித் சிகிச்சை பலனின்றி இரவு 8 மணிக்கு மரணம் அடைந்தான்.   காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.