சென்னை: மத்திய கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கோரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று மாலை அறிவித்தார்.

இதையடுத்து,  தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து தலைமைச் செயலகத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து தமிழகஅரசு தரப்பில் இருந்து பிளஸ்2 பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.