சென்னை: டான்ஸ் சாமியார் சிவசங்கர்பாபாமீது  மேலும் 2 பெண்கள் சிபிசிஐடி காவல்துறையில் புகார் கூறி உள்ளனர். இதனால், அவர்மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

சென்னையின் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி என்ற பள்ளியை நடத்திய வருபவர் சிவசங்கர் பாபா. இவர்மீது பள்ளி மாணவிகள் உள்பட பல பெண்கள் பாலியல் புகார் கூறியிருந்தனர். வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படியில், சிவசங்கர் பாபா மீது,  போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர்மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளன.

இந்த நிலையில், தற்போது  மேலும் இரண்டு பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது  வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.