சென்னை: சென்னை தினத்தை ஒட்டி சென்னை கடற்கரைகளில்  2நாள் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

ஆகஸ்டு 22-ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சென்னையின் 383-வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆகஸ்டு  20 மற்றும் 21ந்தேதி களில்,   கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை  பெசன்ட் நகர் கடற்கரையில் 2 நாட்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டஉள்ளது. பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நாளை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

பெசன்ட் நகரில் 20, 21ந்தேதிகளில்  மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்க மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.  மேலும், ஆகஸ்டு 21-ஆம் தேதி சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழாவுக்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.