சென்னை: சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். 117 பெண்களும், 117 ஆண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தற்போது ஒவ்வொரு தொகுதிகளுக்கும் சென்று தமது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்  நிலையில், தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, துறைமுகம் தொகுதியில் அகமது பாசில், ஒட்டப்பிடாரத்தில்  வைகுண்டமாரி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.