சித்தார்த் நகர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிலர் இரு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்ஹ்டு துன்புறுத்தி உள்ளனர்.

சித்தார்த் நகர் மாவட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு திருட்டு சந்தேகத்தின் பேரில் 2 சிறுவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு சித்ரவதைக்கு ஆளான சிறுவர்கள் இருவரும் 10 மற்றும் 15 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இத்தகைய கொடூரமான செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோவில் ஒரு கும்பல் அந்த சிறுவர்களை பச்சை மிளகாயைச் சாப்பிட வைத்தும், பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரைக் குடிக்க வைத்தும் துன்புறுத்துவதைக் காணமுடிகிறது  அவர்கள் தாங்கள் சொல்வது போலச் செய்யவில்லை என்றால் அடித்துவிடுவோம் என்று சிறுவர்களை மிரட்டுகின்றனர்.

சிறுவர்கள் பணம் திருடியதாக குற்றம் சாட்டி, அவர்களைச் சிலர் பிடித்துக் கட்டி வைத்து இப்படி கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. மற்றொரு தெளிவற்ற வீடியோவில், சிறுவர்கள் தரையில் முகம் குப்புறக் கிடப்பது தெரிகிறது.

சிறுவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, கால்சட்டை கீழே இழுக்கப்பட்டு ஒரு நபர் அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயைத் தேய்க்கிறார். வலியால் அலறும் சிறுவர்களுக்கு மஞ்சள் நிற திரவம் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

இந்த ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த்தா தெரிவித்துள்ளார்.