கோவை: 17வயது டீனேஜ் மாணவி ஒரு கும்பலால்  கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

17வயது டினேஜ் பெண்ணுடன், சமூக வலைதளம் மூலம் பழகிய நபர் ஒருவர், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு, கோவை  குனியமுத்தூரில் உள்ள தனது அறைக்கு சென்ற நிலையில், அங்கு  தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டாக பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.  இதுகுறித்த புகாரின் பேரில்,  உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 கல்லூரி மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உங்கடம் போலீசார்  விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண் வைத்திருந்த செல்போன் சிக்னல்களைக் கொண்டு, அந்த டீனேஜ் பெண் இருக்கும்   இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.