டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 5748 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தகவல்கள் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மேலும்  6,442- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தினசரி  கொரோனா பாதிப்பு விகிதம் 2.04- சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  கடந்த 7 நாட்களில் மட்டும் 37,843- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும்,  கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 46,389- ஆக உயர்ந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்புகளில் இது 1.19 சதவிகிதமாகும்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,748- ஆக உள்ளது.

ரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 34- உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 250- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று மட்டும் 3,109,550- தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,159,816,124- ஆக உயர்ந்துள்ளது.