சென்னை: 14-வது தேசிய வாக்காளர்கள் தினம் ஜனவரி 25, 2024 அன்று கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு  வினாடி வினா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர்கள் தினத்தை ஜனவரி 25, அன்று தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது. 1950ஆம் ஆண்டு சனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011-லிருந்து இது பின்பற்றப்படுகிறது. சட்ட அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு, 2011 ஜனவரியில்  அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டு, 14வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி,  தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில்  SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி 21.01.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 11.00 A.M முதல் 11.15 A.M வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.erolls.tn.gov.in/Quiz2024, இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம்.இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் 18.01.2024 மற்றும் 19.01.2024 (2 நாட்கள் மட்டும்) ஆகிய நாட்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.

இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி 010001 மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். “இந்தியாவில் தேர்தல்கள்” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும்

இணையதளம் https://www.erolls.tn.gov.in/Quiz2024, மாநில உதவி மைய எண்: 1800-4252-1950, மாவட்ட உதவி மைய எண் 1950 மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.