பெங்களூரு

டந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 14 பாஜக அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின.   இந்த முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.  ஆளும் கட்சியான பாஜக எதிர்க்கட்சியாக மாறி உள்ளது.

இந்த தேர்தலில் பாஜக அமைச்சரவையில் இருந்த 14 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்/   அவர்கள் விவரம் வருமாறு :

கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி – தோல்வி

ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர், டி.கே.சிவகுமாரை எதிர்த்து சன்னபட்னா தொகுதி – தோல்வி; பத்மநாபநகர் தொகுதி – வெற்றி.

பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர், பெல்லாரி ஊரகம் – தோல்வி.

முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர், பீளகி தொகுதி – தோல்வி.

வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் – 2 இடங்களிலும் தோல்வி.

டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர், சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி – தோல்வி.

ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர், எல்புர்கா தொகுதி – தோல்வி.

எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர், ஒசகோட்டை தொகுதி – தோல்வி.

கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர், கிருஷ்ணராஜ் பேட் தொகுதி – தோல்வி

பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர், ஹிரேகேரு தொகுதி – தோல்வி.

ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர் – சிக்கநாயகனஹள்ளி தொகுதி – தோல்வி

சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, சிர்சி தொகுதி – தோல்வி

பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்- திப்தூர் தொகுதி – தோல்வி!

சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர் நாவல்குண்ட் தொகுதி – தோல்வி.