சென்னை

ர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்று கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.   இதில் பாஜக, காங்கிரஸ், மற்றும் மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவியது.  இன்று வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.  இரண்டாம் இடத்தில் பாஜகவும் மூன்றாம் இடத்தில் மஜதவும் உள்ளன/

இந்த வெற்றி குறித்து பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் டிவிட்டரில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டரில்,

“முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள் ராகுல். காந்தியைப்போல நீங்கள் உங்கள் வழியில் பயணித்து மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள்.   அவரைப் போலவே மென்மையான வழியில் அன்பு, பணிவுடன் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள்.

உங்களின் நம்பகத்தன்மை வாய்ந்த அணுகுமுறையால் மக்களால் புதிய காற்றைச் சுவாசிக்க முடிந்துள்ளது. பிரிவினையை நிராகரிக்கக் கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாகப் பதிலடி கொடுத்துள்ளனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்”

எனப் பதிவிட்டுள்ளார்.