டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 5,675 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திலான கொரோனா பாதிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மேலும், நாட்டில் 5,108 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,10,057 ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் 45,749 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.44 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் 31 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,216 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் 5,675 கொரோனா நோயாளிகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,36,092 -ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.71% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை எ2,15,67,06,574 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 19,25,881 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]