சென்னை

கேரளா முதல்வருக்குத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு 14 ஆம் தேதி பொங்கல் விடுமுறை அளிக்கத் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று கேரள முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் அவர், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளாகக் கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளை பொங்கல்  பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்.    ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழ்ச் சமூகங்களிடையே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.