கொழும்பு:

ல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை கொழும்பு ஊர்க்காவல் துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி-21 ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை சிறையில் அடைத்தது. இது தொடர்பான விசாரணை இலங்கை ஊர்க்காவல் துறை நீதி மன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையை தொடர்ந்து,  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 13-பேரை நிபந்தனைகளுடன் ஊர்க்காவல் துறை நீதிமன்றம் விடுதலைச் செய்தது. இதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.