சென்னை:
தொடர் விடுமுறையையொட்டி இன்று 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் நாளை சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல்17-ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.