டெல்லி:  இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 2,827 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதே வேளைய்ல  3,230 பேர் குணமடைந்துள்ளனர்.  24 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு  குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நேற்று புதிதாக 2,827 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,13,413-ஆக உயர்ந்துள்ளது..

கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும்  24 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம்,  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,181-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,230பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்,  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,70,165-ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 19,067 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,85,292 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,90,83,96,788 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.