டெல்லி: இந்தியாவில்  கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  19 பேர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து வெளியிட்டுள்ளது. அதில்,

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மேலும்  புதிதாக 796 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,36,928 ஆக உயர்ந்தது.

நேற்று 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,710 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில்  946 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,04,329 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,889 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,85,90,68,616 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,65,507 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.