சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 22 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 17,045 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இன்று மேலும் 22 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 9 பேருக்கும், செங்கல்பட்டில் 6 பேருக்கும், கோவையில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,134 ஆக உயர்ந்துள்ளது.

இன்று எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.

கடந்த 24மணி நேரத்தில் 25 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,14,883 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 226 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.