டெல்லி: பொதுவாழ்வில் எளிமை மற்றும் நேர்மையை எடுத்துரைத்த கோபுர அரசியல் தலைவர் காமராஜர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 119வது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாட்டில் அரசு விழாவாகவும், காங்கிரஸ் கட்சி சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி கொடுத்த மாமனிதர் காமராஜர்,  தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் அவர் கிங் மேக்கராகத் திகழ்ந்தார்.  காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணி ஆற்றியவர்.  காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் மாறினாலும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி, தனது முகநூல் பக்கத்தில் புகழாரம் சூட்டி  பதிவிட்டுள்ளார். அதில்,
பாரத ரத்னா திரு K காமராஜ் ஜி அவர்களின் பிறந்த தினத்தன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
பொதுவாழ்வில் எளிமை மற்றும் நேர்மையை எடுத்துரைத்த கோபுர அரசியல் தலைவர் இவர். மாநிலங்களின் அதிகாரங்களை முன்னறிவித்த ஒரு உண்மையான சாம்பியனாகவும் இருந்தார் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
அத்துடன் தமிழக வருகையின்போது காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.