டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 393 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 9,265 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று  காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டின் கொரோனா பாதிப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,992 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,82,736 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மேலும்,  393பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,75,128 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 9,265பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், மொத்த  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,14,331 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 93,277 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 559 நாட்களில் மிகக்குறைவு

இந்தியாவில் இதுவரை 1,31,99,92,482  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 76,36,569 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.