சென்னை:
மிழகத்தில் வரும் 27ந்தேதி தொடங்கவிருந்த 10வது வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 27ந்தேதி  தொடங்கி ஏப்ரல் 13ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக அனைத்து  கல்வி நிலையங்களும் 31ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தமிழ் புத்தாண்டுக்கு பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.

அதே சமயத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளார்.