சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு  தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், மொத்தம் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைந்தது. 4107 மையங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி  காலை வெளியானது. . ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். இணையதளங்களில் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைந்த மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.  இதில் மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர்  இந்த தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.  இவர்களில் மாணவிகள் 94.53 % பேர் தேர்ச்சி : மாணவர்கள் 88.50 % தேர்ச்சி:  மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்கள் – 8,18,743 (91.55%) மாணவியர் – 4,22,591 (94.53 %) தேர்ச்சி மாணவர்கள் – 3,96,152 (88.58%) தேர்ச்சி இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி