மிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, இன்று வெளியானது.  இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி  மாணவர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். . இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினார்கள்.
தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியானது.  இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி  மாணவர் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதாலிடம் பிடித்தார். . மாநிலத்தின் 3வது இடத்தையும் இப்பள்ளியே பெற்றுள்ளது. மாநிலத்தில்  2வது இடத்தை கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா பெற்றார்.   இவர் 498 மதிப்பெண்கள் பெற்றார்.
cbse-results
மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை  தெரிந்துகொள்ளலாம்.
தற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன், 1ல் கிடைக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறியுள்ளார்.  அதேநேரத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என,தெரிகிறது.