சென்னை: 
மிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.
2022-23 கல்வியாண்டில், திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், எரியூர், ஆலங்குடி, சேர்க்காடு, கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் 10 புதிய கலை – அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.  இதன் படி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்க உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படுகிறது.  ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைகிறது. நெல்லை மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய கலைக்கல்லூரி தொடங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலைக் கல்லூரி தொடங்கப் படுகிறது.