சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 10 கலைக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும் என  அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்  இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் மேலும் 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏரியூர், ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.