சென்னை:  தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன்,  29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 21 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,53,054 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில், இதுவரையிலான உயிரிழப்பு 38,025 ஆக தொடர்கிறது.

தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,14,800 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 229 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 20,297 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,57,98,524 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 0
செங்கல்பட்டு 5
சென்னை 9
கோவை 2
கடலூர் 0
தர்மபுரி 0
திண்டுக்கல் 0
ஈரோடு 0
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 0
கன்னியாகுமரி 0
கரூர் 0
கிருஷ்ணகிரி 0
மதுரை 0
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 0
நாமக்கல் 0
நீலகிரி 0
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 0
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 0
சேலம் 1
சிவகங்கை 2
தென்காசி 0
தஞ்சாவூர் 2
தேனி 0
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 0
திருவண்ணாமலை 0
திருவாரூர் 0
தூத்துக்குடி 0
திருநெல்வேலி 0
திருப்பூர் 0
திருச்சி 0
வேலூர் 0
விழுப்புரம் 0
விருதுநகர் 0