டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பலனின்றி , 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக மேலும், 16,167 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,41,61,899 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு 6.14% ஆக உள்ளது.

நேற்று மேலும்  41 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,730 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,549 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,34,99,659 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும், 1,35,510 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.31% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,06,56,54,741 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 34,75,330 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]