சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது.
இன்று 5,880 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 2,85,024ஆக உயர்ந்துள்ள தாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6,488 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை கொரோனாவில் பேர் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,575 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84% குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 984 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,690ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,742 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 853 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 677 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 5,14,931-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை- 984
திருவள்ளூர்- 388
தேனி- 351
செங்கல்பட்டு- 319
ராணிப்பேட்டை- 253
தி.மலை – 252
கோவை – 228
தஞ்சை-217
கடலூர்- 212
நெல்லை- 200
தூத்துக்குடி-195
குமரி – 187
புதுக்கோட்டை- 173
சேலம்-168
காஞ்சிபுரம்- 166
வேலூர் -158
க.குறிச்சி-139
திண்டுக்கல்-134
தென்காசி-117
மதுரை-109
திருச்சி-105
விருதுநகர்-101
நாகை-78
விழுப்புரம்-73
பெரம்பலூர்-69
ஈரோடு-67
திருப்பத்தூர்-66
சிவகங்கை-64
அரியலூர்-51
கிருஷ்ணகிரி- 46
திருவாரூர்- 44
ராமநாதபுரம்- 43
நாமக்கல்- 34
திருப்பூர்- 31
கரூர்-26
தர்மபுரி – 16
நீலகிரி – 13