டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,406 புதிய வழக்குகள் பதிவாகி உள்ளது. 19,928 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சிகிச்சையில்  1,34,793 பேர் உள்ளனர்.

மத்தியஅரசு இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 19,406 புதிய வழக்குகள் பதிவாகி உள்ளது.  தினசரி நேர்மறை விகிதம் 4.96% ஆக உள்ளது. வாராந்திரி பாதிப்பு விகிதம் 4.63% ஆக உள்ளது.

தற்போது  சிகிச்சையில்  1,34,793 பேர் உள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில் 19,928 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,34,65,552 ஆக உள்ளது.

நாடு முழுவது இதுவரை 205.92 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 10.35 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில், 3,91,187 மோதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 87.75 கோடி மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.