சென்னை

மிழகத்தில் இன்று 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,50,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 29,496 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,82,92,807 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் இருவர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். இதுவரை 35,50,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,033 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,530 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 35,01,8146 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 10,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.

இன்று 353 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 3,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 130 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 98 பேர் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.